தமிழகத்துக்கு எதிராக பாத யாத்திரை நடத்த ராஜ்குமார் திட்டம்
பெங்களூர்:
தமிழகத்துக்கு எதிராக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரையில் நடிகர் ராஜ்குமாரும் பங்கேற்பார் என்றுதெரிகிறது.
வரும் 12ம் தேதியுடன் தனது யாத்திரையை கிருஷ்ணா நிறுத்துகிறார். அதற்குள் ஒரு நாள் ராஜ்குமாரும் இந்த யாத்திரையில்பங்கேற்று தமிழகத்துக்கு எதிரான தனது நிலையை மீண்டும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணாவின் யாத்திரைக்கு எதிர்க் கட்சிகளும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்தால் அதை சமாளிக்கும் வகையிலும் ராஜ்குமாரை இதில் சேர்த்து அனைத்துத்தரப்பினரையும் வாய் அடைக்கச் செய்ய கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமாரிடம் அவர் பேசினார். உடனே அவரும் இதில் பங்கேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக முதல்வர்அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஏற்கனவே பெங்களூரில் சினிமாகாரர்களை திரட்டி ராஜ்குமார் நடத்திய பேரணியால் தான் காவிரி பிரச்சனையில் இருமாநிலங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இந் நிலையில் மீண்டும் ராஜ்குமார் தமிழகத்துக்கு எதிரான பாத யாத்திரையில் பங்கேற்பது நிலைமையை இன்னும் மோசமாக்கப்போவது நிச்சயம்.












Click it and Unblock the Notifications