For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம் மீதான அவமதிப்பு வழக்கு: 11 தேதி விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு மீதானவிசாரணை 11ம் தேதி நடக்கவுள்ளது. இன்று இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை 11 ம் தொடங்குவதாகஅறிவித்தது.

தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கோரி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரு உத்தரவுகளையும் கர்நாடகம் மதிக்கத் தவறுவிட்டது.

உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் சரி, தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் கூறிவிட்டது.

இதையடுத்து முதல்வர் கிருஷ்ணா, பாசன அமைச்சர் பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா, பொதுப்பணித்துறைச் செயலாளர்,தலைமைப் பொறியாளர் ஆகியோர் மீது தமிழக அரசு இரண்டாவதாக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

முதல் அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் இந்த இரண்டாவது வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக வழக்கறிஞர் வைத்தியநாதன்கோரினார்.

இந்த வழக்கை 11 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி காரே, நீதிபதி அசோக் பான், நீதிபதி சின்ஹா அடங்கியடிவிஷன் பெஞ்ச் அறிவித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X