இது பதிலடிப் போராட்டம்: விஜய்காந்த்
நெய்வேலி:
கர்நாடக நடிகர்கள் தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தான் நாங்களும் பதிலடிப் போராட்டம் நடத்துகிறோம் எனவிஜய்காந்த் கூறினார்.
அவர் பேசுகையில், பேசுவதற்கு முன் புரட்சித் தலைவிக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டும் அதை கர்நாடகம் மதிக்கவில்லை.
நாம் அமைதியாகத் தான் இருந்தோம். ஆனால், கர்நாடகத்தில் நடிகர்கள் தேவையில்லாமல் தலையிட்டு தமிழகத்துக்கு எதிராகபோராட்டத்தைத் தூண்டியதால் தான் நாங்களும் பதிலடி போராட்டத்தை ஆரம்பித்தோம்.
வந்தாரை வாழ வைப்பது தமிழகம். எல்லோரையும் வாழ வைத்துக் கொண்டுள்ளது. அந்தப் பெருந்தன்மையை சீண்டிப் பார்க்கவேண்டாம். எத்தனை கதாநாயகர்களை வாழ வைத்திருக்கிறது தமிழகம்.
கர்நாடகத்தில் தமிழர்களை தாக்குவார்கள் என்று சிலர் சீண்டி விடுகின்றனர். இங்கு கன்னடர்கள் இல்லையா? இதனால்தேவையில்லாமல் காவிரி விஷயத்தில் கர்நாடகத் தமிழர்களுக்கு பிரச்சனை வரும் வகையில் யாரும் பேச வேண்டாம். அந்தவிஷமத்தனத்தை கைவிட்டுவிடுங்கள்.
பேரணி நடத்த முடியுமா என்று கேட்டார்கள். இதைவிட வெற்றிகரமாக யாராவது நடத்தியிருக்க முடியுமா? லட்சக்கணக்கில்திரண்டிருக்கிறார்கள் மக்கள். ஒற்றுமையுடன் வந்திருக்கிறார்கள் கலைஞர்கள். நடிகர் சங்கத்தில் அரசியல் வேண்டாம்.
இப்படி பெரும் கூட்டமாகத் திரண்ட மக்களுக்கு நன்றி. தமிழ் உணர்வு மங்கிப் போகவில்லை எனபதைத் தான் இது காட்டுகிறது.
காவிரி விவகாரத்தை பிரதமரும் முதல் அமைச்சர்களும் பேசித் தீர்க்க வேண்டும் என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications