நத்தைகளை சாப்பிடும் நாகை விவசாயிகள்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அப்பகுதி விவசாயிகள் பசியை அடக்குவதற்காகநத்தைகள், நண்டுகளை (கடல் நண்டுகள் அல்ல, வயல்களில் காணப்படும் நண்டுகள்) பிடித்து சாப்பிட்டுவருகின்றனர்.
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாடிக்கொண்டுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் கடைசிப் பகுதியாக இருப்பது தான் நாகப்பட்டினம். கர்நாடக அரசின் நியாயமற்றபோக்கினால் காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, இப்போது சம்பாவும் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நாகப்பட்டினம் விவசாயிகள் தான். காவிரி நீர் சுத்தமாக வராதநிலையில், இங்கு விவசாயமே செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இத்துடன்வறட்சி வேறு சேர்ந்து கொள்ளவே இவர்களது நிலை சொல்ல முடியாத அவல நிலைக்கு சென்று விட்டது.
இப்போது, பசிக்கொடுமையைப் போக்குவதற்காக ஆற்றோரங்களில் காணப்படும் நத்தைகள், நண்டுகளைப்பிடித்து வறுத்து சாப்பிட்டு வருகிறார்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள்.
நண்டுகளையும், நத்தைகளையும் பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய், மிளகாய்ப் பொடி வாங்க்க கூடஇவர்களிடம் காசு இல்லை. எனவே அப்படியே வறுத்து சாப்பிடுகிறார்கள்.
இந்த அவலத்தை உணர்ந்த சர்வோதய சங்கம், விவசாயிகளுக்கு அரைக் கிலோ மிளகாய்ப் பொடியை இலவசமாகவழங்கி வருகிறது.
இதெல்லாம் மனிதாபிமானம் சற்றும் இல்லாத கர்நாடகத்தின் மரமண்டையில் நிச்சயம் ஏறப் போவதில்லை. மத்தியஅரசும் வேடிக்கை பார்த்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் இயற்கையும் மட்டுமே இவர்களைக் காப்பாற்ற முடியும்.












Click it and Unblock the Notifications