62 பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் டெபாசிட்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் நடைறைப்படுத்தப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களின்கீழ் கோவை மாவட்டத்தில் மொத்தம் 62 பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.22,200 டெபாசிட்செய்யப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.15,200 டெபாசிட் செய்யப்படும்.
பத்திரங்கள் வாயிலாக இந்தத் தொகை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டு, குழந்தைக்கு 20 வயதுஆகும் போது அந்தத் தொகை கிடைக்கும் வகையில் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த 62 பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.9,56,400வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications