""ஸ்டிரைக்கில் ஈடுபடுபட்டால் "எஸ்மா" சட்டம் பாயும்"": அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சென்னை:
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் குதித்தால் அவர்கள் மீது "அத்தியாவசியபணிப் பராமரிப்பு சட்டம்" (எஸ்மா) பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போனஸ், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்சங்கம் (ஜேக்டோ-ஜியோ) உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபடவுள்ளனர்.
அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை 4 சதவீதம் உயர்த்தினால் அவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று தமிழக அரசு நினைத்தது. அதன்படி நேற்று மாலை இந்த அகவிலைப் படி உயர்வையும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் மசியாத அரசு ஊழியர்கள், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடிவேலைநிறுத்தம் தொடங்கும் என்று உறுதியாக அறிவித்து விட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு அடுத்த அஸ்திரத்தை இன்று எடுத்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசுஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் பாயும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே சில கடினமான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தேவையில்லாதது.மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானதும் கூட.
வேலைக்கு வராத நாட்கள் கணக்கிடப்பட்டு அந்த நாட்களுக்கு அரசு ஊழியர்களின் சம்பளத் தொகைகுறைக்கப்படும்.
மேலும் "எஸ்மா" சட்டத்தின் கீழும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி பணிக்கு வர விரும்பும் அரசு ஊழியர்களைத் தடுத்து நிறுத்துபவர்களும்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
எனவே அரசு ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications