For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசை கண்டித்து தலைமை ஆசிரியர் தீக்குளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்ட விவகாரத்தில் அரசு மெத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டித்துபொள்ளாச்சியில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

போனஸ், அகவிலைப் படி உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப் படிக்கும் அதிகமாக தரப் போவதில்லை என்று உறுதியாகஅறிவித்து விட்ட தமிழக அரசு, வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிட்டு வந்தால் தான் அரசு ஊழியர்களுடன்பேச்சு நடத்தப்படும் என்றும் கூறிவிட்டது.

அரசின் இந்தப் பிடிவாதப் போக்கைக் கண்டித்து பொள்ளாச்சி அருகே உள்ள நம்பியமுத்தூர் ஆரம்பப் பள்ளியின்தலைமை ஆசிரியர் காசிப் பாண்டியன் (52) இன்று காலை தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

பொள்ளாச்சியில் உள்ள துணை கல்வி அதிகாரி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்கள்கண்ணெதிரிலேயே காசிப் பாண்டியன் தீக்குளித்ததைக் கண்டு மற்ற அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சிஅடைந்தனர்.

உடனே அவரைக் காப்பாற்ற அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அதற்குள் காசிப் பாண்டியனின் 80 சதவீத உடல்வெந்து விட்டது.

அவர் உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்திய சுமார் 1,250அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியரே அரசுக்கு எதிராக தீக்குளித்தது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X