For Daily Alerts
Just In
வெள்ள நிவாரணத்திற்கு உதவாத வெட்டி ஆபிஸர் சஸ்பெண்ட்
சென்னை:
சென்னை நகரை மூழ்கடித்துள்ள மழை நிவாரணப் பணிகளில் சரியாக ஈடுபடாமல் அலட்சியமாக இருந்தமாநகராட்சி உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுததொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் மாநிகராட்சி சார்பில் போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளில் சரியான முறையில் கவனம் செலுத்தாமலும், அலட்சியமாகவும், பணியில் அக்கறைசெலுத்தாமலும் இருந்த உதவி செயற் பொறியாளர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ராமச்சந்திரன் மற்றும் மஸ்தான் எனப்படும் இரண்டு உதவி வருவாய் அதிகாரிகளுக்கு எச்சரிக்கைநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது கூறியுள்ளார் கலைவாணன்.
Comments
Story first published: Saturday, November 2, 2002, 5:30 [IST]