For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் அதிமுக எம்.பி. தேர்தல் செல்லுமா?- மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கரூர் அதிமுக எம்.பியான சின்னசாமி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறு ஓட்டு எண்ணிக்கைநடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1999ல் நடந்த கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை 2,847வாக்குகள் வித்தியாசத்தில் சின்னசாமி தோற்கடித்தார்.

இந்நிலையில் சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிச்சாமிவழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில்,

இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டதாக மூன்று அதிமுகவினர் பிடிபட்டனர்.

மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லும் நடந்துள்ளது. எனக்கு சாதகமான ஓட்டுக்களை செல்லாதவைஎன்று கூறி நிராகரித்து விட்டனர்.

எனவே சின்னசாமி வெற்றி பெற்றதை ரத்து செய்து விட்டு, கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஓட்டுக்களை மீண்டும்எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும்.

நானே வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி தன் தீர்ப்பில், கரூர் தொகுதி ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்குஉத்தரவிடுகிறேன். இந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்த ஒரு வாரத்திற்குள் இந்த ஓட்டுக்கள் எண்ணப்படுவதற்கு உயர்நீதிமன்றப் பதிவாளர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

கரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்:

மொத்த ஓட்டுக்கள் - 11,70,582

பதிவானவை - 7,19,705

செல்லாதவை - 16,906

எம். சின்னசாமி (அதிமுக) - 3,34,407

கே.சி. பழனிச்சாமி (திமுக) - 3,31,560

கே. நாட்ராயன் (தமாகா) - 45,539

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X