சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிய 6 சிறுவர்கள் மீட்பு
சென்னை:
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற 8 சிறுவர்களில் 6 பேர்பிடிபட்டனர். மற்ற 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
ராயபுரம் பகுதியில் தமிழக சமூக நலத்துறையின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்றங்கள் செய்து தண்டனைவிதிக்கப்பட்ட சிறுவர்கள் இங்கு சேர்க்கப்படுவர்.
இந்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக அடிக்கடி புகார் வருவதுண்டு. இதையடுத்துஅவ்வப்போது இங்கிருந்து சிறுவர்கள் தப்பிப்பது சகஜமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 8 சிறுவர்கள் தப்பினர். இதையடுத்து சிறுவர்களைத் தேடும்பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
அவர்களில் 6 சிறுவர்கள் பாரிமுனை பஸ் நிலையத்தில் வைத்து பிடிபட்டனர். மற்ற 2 பேரையும் தேடும் பணிதொடர்ந்து வருகிறது.
சீர்திருத்தப் பள்ளியில் பணியாற்றுவோர் சிறுவர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல்கொடுமைகள் செய்வதாகவும் வரும் புகார்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை எழுந்துள்ளது.
-->