For Daily Alerts
Just In
அதிமுக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியினர் உண்ணாவிரதம்
சென்னை:
அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் சென்னையில் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திமுக மகளிர் அணி செயலாளர் சற்குண பாண்டியன் இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்கினார்.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக சற்குண பாண்டியன் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தை முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கான் தொடங்கி வைத்தார்.
பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக தலைவர்கள் மகளிர் அணியினரின் உண்ணாவிரதப்போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
-->
Comments
Story first published: Thursday, November 14, 2002, 5:30 [IST]