ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா அப்பீல்: தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுக்கோட்டை கோர்ட்டில் தனக்கு அளிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் "செக்ஸ் சாமியார்" பிரேமானந்தா தொடர்ந்த அப்பீல் மனு மீதான தீர்ப்புஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி பெண்களைக் கற்பழித்ததாகவும், அதைக் கண்டுபிடித்த ரவி என்பவரை கொன்றுஆசிரமத்திற்குள் புதைத்ததாகவும் பிரேமானந்தா மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தத் தண்டனையை எதிர்த்தும், ரத்து செய்யக் கோரியும் பிரேமானந்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications