சென்னை சாலைகளை சீரழித்தது யார்? திமுக-அதிமுக சர்ச்சை தொடர்கிறது
சென்னை:
சென்னை நகரில் சாலைகள் போட திமுக அரசு ரூ.104 கோடி நிதியை ஒதுக்கியதாகக் கூறுவது பச்சைப் பொய்என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெய்த கடும் மழையால் சென்னை நகரின் பல சாலைகள் பெயர்ந்து போயுள்ளன. இவற்றைச் சரிசெய்வதற்காகத் தமிழக அரசு சமீபத்தில் ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் இந்தத் தொகை ஏற்கனவே நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஒதுக்கிய தொகை தான் என்று திமுககூறியது. இது தொடர்பாக சம்பத் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சரி செய்யவும், புதிய சாலைகள் போடவும் அதிமுகஅரசு ரூ.104 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நிதியை தாங்கள் தான் ஒதுக்கியதாக திமுகஅப்பட்டமாகப் புளுகுகிறது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், 2,178 கி.மீ. தொலைவிலான சாலை சரி செய்யப்பட்டுள்ளது.இதற்காக ரூ.209.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு சராசரியாக, ரூ.42 கோடி செலவில், 435 கிலோமீட்டர் சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிவரையிலான காலகட்டத்தில் 833 கி.மீ. சாலைகளை சீர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்காகவே ரூ. 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் பணம் முழுக்க முழுக்க அதிமுகஅரசினால் ஒதுக்கப்பட்ட நிதி தான் என்பது உறுதியாகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரியான தவறான செய்தியைப் பரப்பி வருகிறது திமுக என்று கூறியுள்ளார் சம்பத்.
இரு கட்சிகளுமே தங்கள் கட்சியைச் சேர்ந்த காண்ட்ராக்டர்களுக்கு டெண்டர் தந்து கோடிக்கணக்கில் பணத்தைசுருட்டியது தான் சாலைகள் இவ்வளவு மோசமானதற்குக் காரணம். இதை இந்த இரு கட்சியினருமேமறைத்துவிட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது தான் உண்மை.
-->












Click it and Unblock the Notifications