For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 3 பயங்கர ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையைக் கலக்கி வந்த 3 பயங்கரமான ரவுடிகளைப் போலீசார் துப்பாக்கிச் சண்டை நடத்தி சுட்டுக்கொன்றனர்.

சென்னை புறநகர் மற்றும் செங்கை கிழக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வந்தன. தாம்பரம், பெருங்களத்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குறி வைத்து ஒருகும்பல் கொள்ளையடித்து வந்தது.

பெரும்பாலும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டியே இந்தக் கும்பல் கொள்ளையடித்து வந்தது.இதனால் தனியாக வீட்டில் இருப்பதற்கே பெண்கள் மிகவும் பயந்தனர்.

இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியான பொன்மாணிக்கவேல் தலைமையில் மூன்று தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.

இவர்களுடைய தீவிர முயற்சியால் கிருஷ்ணன், முருகன் மற்றும் கோவிந்தன் ஆகிய மூன்று கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டனர். வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கொள்ளைகளை இவர்கள் நடத்தியுள்ளதுவிசாரணையில் தெரிய வந்தது.

மேலும் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை நீலாங்கரை அருகே உள்ள ஜூகு பீச்சில் பதுக்கிவைத்துள்ளதாகக் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இதையடுத்து அந்தப் பொருட்களைமீட்பதற்காக கொள்ளையர்களை அங்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

பீச் மணலில் நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் என்பவன் திடீரென்று குனிந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டரின்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டான். இதையடுத்து மற்ற இரண்டு கொள்ளையர்களும் அவன் அருகே ஓடினர்.துப்பாக்கி முனையில் அவர்கள் மூவரும் தப்பிக்க முயற்சித்தனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற சந்திரசேகர் என்ற சப்-இன்ஸ்பெக்டரை அவர்கள் சுட்டுக் காயப்படுத்தி விட்டு ஓடஆரம்பித்தனர். போலீசாரும் அவர்களை விடாமல் துரத்தினர்.

இதையடுத்து கொள்ளையர்கள் திடீரென்று திரும்பி நின்று போலீசாரை நோக்கி சராமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர். இதில் செந்தில்குமார் மற்றும் வயிரவன் ஆகிய இரு போலீசார் குண்டுக் காயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மற்ற போலீசார் தங்களைக் காத்துக் கொள்வதற்காகக் கொள்ளையர்களை நோக்கித்துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் பலத்த குண்டுக் காயமடைந்த மூன்று கொள்ளையர்களுமே இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அந்தஇடத்திலேயே உயிரிழந்தனர்.

சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பெரும் பரபரப்புநிலவியது.

காயமடைந்த போலீசார் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X