For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 முதியவர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

மதுராந்தகம்:

மோட்டார் சைக்கிளில் சென்ற 70 வயது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், 60 வயதான ஓய்வு பெற்றஆசிரியரும் பஸ் மோதி பரிதாபமாகப் பலியானார்கள்.

உத்திரமேரூர் அருகே உள்ள அகரம்தூளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கு வயது 70. முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தெய்வசிகாமணி. இவருக்குவயது 60.

அகரம்தூளி கிராமத்தில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மதுராந்தகத்தில்சிலரிடம் நன்கொடை வசூலிப்பதற்காக தெய்வசிகாமணி தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். அவருடன்சுப்பிரமணியமும் உடன் சென்றார்.

மதுராந்தகத்தில் நன்கொடை வசூலித்து விட்டு ஊர் திரும்பினர். கருங்குழி என்ற இடம் அருகே வந்தபோது,செங்கல்பட்டிலிருந்து வந்த தனியார் பஸ் மிக பயங்கர வேகத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீதுபயங்கரமாக மோதியது.

இதில் தெய்வசிகாமணி அந்த இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த சுப்பிரமணியம் படுகாயமடைந்துரத்த வெள்ளத்தில் துடித்தார். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X