டைரி.. வயர்லெஸ்.. ரூ.40 கோடி பேரம்..
பெங்களூர்:
காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா எழுதியுள்ள டைரியில் "ரூ.40 கோடி"மற்றும் "வயர்லெஸ் மெஸேஜ்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்குச் சுமார் 500 அடி தொலைவில் ஒரு டைரி உள்ளிட்ட பல்வேறுபொருள்களை கர்நாடக அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.
நூறு பக்க நோட்டுப் புத்தகத்தை டைரி போல தேதியிட்டு நாகப்பாவே அதில் எழுதியுள்ளார். அது நாகப்பாவின்கையெழுத்து தான் என்பதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
அந்த டைரியில், பல இடங்களில் "ஓம் நமசிவாயா" என்று எழுதியுள்ளார் நாகப்பா. மேலும் பொன்னாச்சிமகாதேவசாமி (கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்) கடந்த அக்டோபர் 5ம் தேதி என்னை வந்துசந்தித்தார் என்றும் எழுதியுள்ளார்.
இன்னொரு பக்கத்தில் "ரூ.40 கோடி", "வயர்லெஸ் மெஸேஜ்" என்று கோட்வேர்டில் எழுதியுள்ளார்.
இந்த வார்த்தைகள் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. நாகப்பாவை விடுவிப்பதற்காக யாரிடமாவதுரூ.40 கோடி வரை வீரப்பன் பேரம் பேசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மகாதேவசாமி தன்னை வந்து சந்தித்ததாக நாகப்பா எழுதியுள்ளதால் அவர் மீது போலீசாரின் சந்தேகக் கணைகள்பாய்ந்துள்ளன.
இது தொடர்பாக மகாதேவசாமியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவிக்கு கடிதம்:
மேலும் தன் மனைவி பரிமளாவுக்கும் அந்த டைரியில் சில பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார் நாகப்பா. அதைகடிதமாக யார் மூலமாவது அனுப்ப அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்தக் கடிதத்தில் அவர்காட்டில் பட்ட பாடுகளை விவரித்துள்ளார்.
அதன் விவரம்: நம் மகள் பிங்குவின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? நல்ல நர்ஸை வைத்துநல்லபடியாக அவளுக்குப் பிரசவம் பார்க்கவும். அவளை எந்தவிதமான குறையும் இல்லாமல் கணவர் வீட்டுக்குஅனுப்பி வை.
நான் கடத்தப்பட்டதால் நம் மகன் பிரீத்தம் எம்.டி. தேர்வு எழுதவே செல்லாதது எனக்குப் பெருத்த வேதனையைஅளித்துள்ளது.
பணப் பிரச்சனை ஏற்பட்டால் உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொள். மாடுகளை கூட விற்றுக் கொள்.இல்லையெனில் நமது நிலத்தில் விளைந்த மஞ்சளை விற்று பணமாக்கிக் கொள். கடந்த சில வாரங்களாக மழையேஇல்லை. வாழை, புளியந் தோப்பில் விளைச்சல் எப்படி உள்ளது?
இங்கே, வாரம் ஒருமுறைதான் உடை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு டிரெஸ்தான்எனக்கு வீரப்பன் கொடுக்கிறான். மாதம் ஒருமுறை மட்டுமே குளிக்க முடியும்.
தினமும் காலையில் ஒரு கிளாஸ் நீர் மட்டுமே கிடைக்கும். அதை வைத்துதான் முகம் கழுவிக் கொள்ள வேண்டும்.காலைக் கடனை கழிப்பதற்கும் ஒரே ஒரு டப்பாவில் நீர் தருவார்கள்.
குடிப்பதற்கு பவுடர் பால் மட்டும்தான். தயிர், மோரெல்லாம் கிடையாது. காட்டுக்குள்ளேயே 34 இடங்களுக்குஎன்னை மாற்றி மாற்றி அலைக்களித்துள்ளான் வீரப்பன். ஒவ்வொரு இரவிலும் இடம் மாற வேண்டும்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications