ஆசிரியை எரித்துக் கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முற்றுகை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஒரு ஆசிரியை எரித்துக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அவரது கணவர்உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்அம்மாநில சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாண்டிச்சேரி அருகே உள்ளது சேயாங்குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கோமதிஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் தேதி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கோமதி. ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.
இறப்பதற்கு முன் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில், தன் கணவர் கணேசன், பள்ளி நிர்வாகி மற்றும் சிலர்தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தன் மீது கெரசின் ஊற்றி தீவைத்ததாகவும், தன் சாவுக்குஅவர்களே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்தச் செய்தி பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆசிரியை கோமதி சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிஇந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 100 தொண்டர்கள் பாண்டிச்சேரி சட்டசபை வளாகத்தில் குவிந்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்ட பிறகே,தங்களுடைய ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு இரு கட்சித் தொண்டர்களும் கலைந்து சென்றனர்.
-->












Click it and Unblock the Notifications