For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரபாபு- ஜெ. சந்திப்பு: கிருஷ்ணா நீர் கோரினார்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை நகருக்குத் தேவையான கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவதற்கானநடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக முதல்வர்ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

சுமார் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காகத் தன் தோழி சசிகலாவுடன் நேற்று முன் தினம் ஹைதராபாத் சென்றார்ஜெயலலிதா.

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு ஜெயலலிதா சென்றார்.

அவரை அன்புடன் வரவேற்ற நாயுடுவும் அவருடைய மனைவி புவனேஸ்வரியும், ஜெயலலிதாவுக்குச் சிறப்பானமதிய விருந்தளித்தனர். பின்னர் நாயுடுவுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினார் ஜெயலலிதா.

வரும் ஏப்ரல் மாதம் முதல் சென்னைக்குப் போதுமான கிருஷ்ணா நதி நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத்துரிதப்படுத்த வேண்டும் என்று நாயுடுவிடம் அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பணிகளை முடிக்கும் அளவில் நடவடிக்கைகள்எடுக்கப்படும் என்று ஜெயலலிதாவுக்கு நாயுடு உறுதியளித்தார்.

கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்காக டெல்லி சென்றிருந்தபோதே இரு முதல்வர்களும் இந்தச்சந்திப்பு குறித்து முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதிமுக இணையலாம் என்று எதிர்பார்க்கப்படும்சூழ்நிலையில் நாயுடுவும் ஜெயலலிதாவும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பதும்நினைவிருக்கலாம்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X