கோவை சிறையில் தமிழ் தீவிரவாதிகள் தாக்கியதில் 4 வார்டன்கள் காயம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் சிறைஅதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு ஜெயிலர் மற்றும் 3 வார்டன்கள்படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு ஆயுதப் படைக் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறையில் அல்-உம்மா மற்றும் தமிழ் தீவிரவாதிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 11வது பிளாக்கில் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த ஏழு தமிழ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பகல் பக்கத்து பிளாக்கில் இருந்த ஒரு கைதியைப் பார்த்துப் பேச ஒரு தமிழ்தீவிரவாதி முயன்றுள்ளான். ஆனால் சிறைக் காவலர்கள் அதற்கு அனுமதி தர மறுத்தனர்.
இதையடுத்து மற்ற தமிழ் தீவிரவாதிகளும் அவனுடன் சேர்ந்து கொண்டு உருட்டைக் கட்டைகளால்சிறை காவலர்களைப் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் சிறைக் காவலர்கள் சிறிதிநிலைகுலைந்து போனாலும் பின்னர் பதிலுக்குத் தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம்ஏற்பட்டது.
இருந்தாலும் தமிழ் தீவிரவாதிகளின் மிகவும் மோசமாகத் தாக்கியதில் ஒரு ஜெயிலரும், மூன்று சிறைவார்டன்களும் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து சிறையின் அபாய மணி ஒலிக்கப்பட்டது. காயமடைந்த ஜெயிலரும் சிறை வார்டன்கம்சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்கிய தமிழ் தீவிரவாத கைதிகள் உடனடியாகஅவர்களுடைய அறைகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அந்த பிளாக்கில் மேலும் தகாத சம்பவங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகஏராளமான ஆயுதப் படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் சிறையில் கைதிகளை வார்டன்கள் மிகவும் தரக் குறைவாக நடத்துவதாக சமீபத்தில்அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம்தான் இங்கு மனிதஉரிமை கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications