வீரப்பன் சுற்றி வளைப்பு: விரைவில் பிடிபடுவான் என்கிறார் டி.ஜி.பி.

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வீரப்பனை மாதேஸ்வரன் மலைப் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவனால் அப் பகுதியில் இருந்து தப்ப முடியாது எனதமிழக காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறினார்.

சமீபத்தில் வீரப்பன் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஒரு அதிரடிப் படை வீரர் மதுரை அரசு மருத்துமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க டி.ஜி.பி. இன்று மதுரை வந்திருந்தார். மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

கர்நாடக மற்றும் தமிழக போலீசார் அவனை அந்த மலைப் பகுதியிலேயே சுற்றி வளைத்துவிட்டனர். இதனால் அவன் பிடிபடப் போவதுநிச்சயம். இந்தப் பகுதிக்குள் தான் அவன் சுற்றி வந்தாக வேண்டும்.

வெளியில் வரவோ, இனியும் ஆட்களைக் கடத்துவது போன்ற செயல்களில் அவன் ஈடுபடுவோ வாய்ப்பே இல்லை.

நான் சமீபத்தில் அந்தப் பகுதியில் 3 நாட்கள் தங்கியிருந்து நிலைமையை நேரில் பார்வையிட்டேன். மலை மாதேஸ்வரத்தில் தமிழகஎல்லையில் உள்ள இளஞ்சிகரை, கட்டாகரை, பாலாறு ஆகிய பகுதிகளிலும் கர்நாடகத்தில் உள்ள தெங்கடி என்ற இடத்திலும்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 இடங்களில் இருந்தவண்ணம் தேடுதல் வேட்டை நடக்கிறது. மிக அடர்ந்த காடு அது. வீரப்பன் இந்த 4 இடங்களுக்கும் இடையேதான் தப்பியோடிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் அவனைப் பிடித்துவிட முடியும்.

பெண்களுக்கான குற்றஙகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார் ராஜகோபாலன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+