குஜராத் மதக் கலவர சிடிக்களுடன் வாலிபர் கைது
கோயம்புத்தூர்:
குஜராத் வன்முறையின்போது சிறுபான்மையினர் விரட்டி விரட்டி கொல்லப்பட்டதைக் காட்டும் சி.டிக்களுடன்ஒருவர் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்-உம்மாவைச் சேர்ந்த அம்ஜத் (வயது 22) என்ற வாலிபர் இந்த சிடிக்களை காப்பி எடுத்து இஸ்லாமியமக்களிடையே வினியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாகஇவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து சிடி ரைட்டர், கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை இனப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கும்பல்கள் விரட்டி விரட்டிக் கொல்லும் காட்சிகள் இதில்இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே மதரீதியில் மிக சென்சிடிவ் பகுதியான கோவையில் இந்த சிடிக்களின் வினியோகத்தால் பெரும்கலவரம் வெடிக்கலாம் என போலீசார் அஞ்சுகின்றனர். இதையடுத்து ஏற்கனவே வினியோகிக்கப்பட்டுவிட்டசிடிக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைளிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அம்ஜத் 5வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்துஅவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications