For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் கைதுக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பு: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சமீபத்தில் சென்னையில் ஆடிட்டர் ஒருவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டதற்கும், தமிழக அமைச்சரவைமாற்றத்திற்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக பொதுக் குழு விளக்கக் கூட்டம் சென்னை தங்கச்சாலை மணி கூண்டு எதிரே நடந்தது. பொதுச் செயலாளர்அன்பழகன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதில், கருணாநிதி பேசுகையில்,

கடந்த 2 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 8 அல்லது 9 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மாற்றப்பட்டதற்கும், இப்போது மாற்றப்பட்டுள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது, இதில் மர்மமும்நிலவுகிறது.

சமீபத்தில், சென்னையில் ஆடிட்டர் ஒருவரை சிபிஐ அதிகாகள் கைது செய்து கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல்செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சில அமைச்சர்களின் பதவி பறிபோயுள்ளது.

இதற்கும், அதற்கும் சில தொடர்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. இதை மக்கள் கவனிக்க வேண்டும்.

பேசவே முடியாத சமஸ்கிருதம் இந்தியாவின் செம்மொழி என்று கூறும்போது பேசவும், எழுதவும் கூடிய, உலகம்முழுவதிலும் பரவியிருக்கக் கூடிய தமிழ் மொழியை செம்மொழியாக்க என்ன தயக்கம்?.

இதில் இனியும் தாமதம், தயக்கம், பாரபட்சம் காட்டப்பட்டால் திமுக சும்மா இருக்காது.

தமிழகத்தில் பதவியில் இருக்கும் அநியாய ஆட்சி, போலீஸ் அராஜகம் ஆகியவற்றை மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிமுகவை வீழ்த்ததிமுக சார்பில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X