முதன்முதலில் பெண் காவலர்களை நியமித்ததே திமுக ஆட்சிதான்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் முதன் முதலாக பெண்களைக் காவலர்களை நியமித்ததே திமுக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
கடந்த 1970களில் முதல் முறையாக திமுக ஆட்சியில்தான் பெண்கள் காவலர்களாகநியமிக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் சத்துணவுத் திட்டம் விரிவாகவும், பெரிய அளவிலும்மேற்கொள்ளப்பட்டது என்றாலும், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது காமராஜர்என்பதை வரலாறு மறைக்க முடியாது.
அதேபோல, மாநகராட்சி அளவில் சென்னையில் முதல் முறையாக சத்துணவை அமல்படுத்தியதுசர். பிட்டி தியாகராயர்தான் என்பதையும் வரலாறு மறைக்க முடியாது.
அதுபோலத்தான், திமுக ஆட்சியில்தான் முதல் முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்என்பதையும் யாரும் மறைத்திட முடியாது.
அகலிகைக்கு சாப விமோச்சனம் கிடைத்தது போல, பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள்சிலருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை கொடுத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications