அதிகாரிகளை கொன்ற சி.ஆர்.பி.எப். காவலர் சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இரு அதிகாரிகளை அந்தப் படையின் காவலரே சுட்டுக் கொன்றார்.இதையடுத்து அவரை இன்னொரு பாதுகாவலர் சுட்டுக் கொன்றார்.
ஸ்ரீநகர் இன்டோர் ஸ்டெடியத்தில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது.
குடிப்போதையில் இருந்த ஒரு காவலர் அவரது அதிகாரியான ஹவில்தார் மேஜரை தகாத வார்த்தைகளால்திட்டினார். இதையடுத்து அவரை பிறர் எச்சரித்து அனுப்பினர்.
ஆனால், பின்னர் துப்பாக்கியுடன் வந்த அந்தக் காவலர் ஹவில்தாரை சுட்டுக் கொன்றார். இதன் பின்னர் அருகில்இருந்த அறையில் இருந்த இன்னொரு ஹவில்தார் மேஜரையும் சுட்டுக் கொன்றார்.
இதைப் பார்த்த பாதுகாவலர் தீவிரவாதி தான் நுழைந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துஅந்தக் காவலரைச் சுட்டுக் கொன்றார்.
இச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications