For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டிக்கு வந்த ஆபத்து!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியிருப்பதால், நீலகிரிமாவட்டத்திற்கு படப்பிடிப்புக்காக வரும் திரையுலகினர் இனிமேல் வெளி மாநில குளுகுளு வாசஸ்தலங்களுக்குசெல்லும் அபாயம் உள்ளதாக நீலகியில் உள்ள துணை நடிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் சூட்டிங்குகளை நம்பி ஊட்டியில் வசிக்கும் 1,500 குடும்பங்கள் தங்களது பிழைப்பில் மண்விழுந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எழில் கொஞ்சும் பகுதிகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடைபெறுவதுஅன்றாட நிகழ்ச்சியாகும். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிப் படங்களும் இங்கு எடுக்கப்படுகின்றன.

இந் நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கான அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசுபல மடங்கு உயர்த்தியுள்ளது.

இதனால் படப்பிடிப்புக் குழுவினர் இனிமேல் ஊட்டியைத் தவிர்த்துவிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என திசைமாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாக ஊட்டியில் வசிக்கும் துணை நடிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஊட்டி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளரும் துணை நடிகர், நடிகைகள் ஏஜெண்டுமான லாரன்ஸ் கூறுகையில்,படப்பிடிப்புகளை நம்பி நீலகிரி மாவட்டத்தில் 1500 குடும்பங்கள் உள்ளன. அரசின் முடிவால் இவர்கள்அனைவரும் சாப்பாட்டுக்கே திண்டாடும் அவல நிலை ஏற்படும். எனவே இந்தக் கட்டண உயர்வை தமிழக அரசுதயவு செய்து வாபஸ் பெற வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X