சென்னையை சேர்ந்த 3 பேர் திருப்பதியில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த 3 பேர் திருப்பதி கோவில் விடுதியில் தற்கொலை செய்து கொண்டனர்.
ராதாகிருஷ்ணன் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். பிரபாவதி ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்துவந்தார்.
5ம் தேதி திருப்பதி சென்ற இவர்கள் மேல் திருப்பதியில் உள்ள ஹில்வியூ காட்டேஜில் அறை எடுத்துத் தங்கினர்.ஆனால், நேற்று வரை அறை திறக்கப்படவே இல்லை. கதவை எவ்வளவோ தட்டியும் திறக்காததால்சந்தேகமடைந்த காட்டேஜ் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது தான் மூவரும் விஷம் குடித்துஇறந்து கிடந்தது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications