For Daily Alerts
Just In
மேட்டூர் அணை: நீர் மட்டம் 43 அடியாக உயர்வு
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருவதால்அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 7,859 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 43 அடியாகஉயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கர்நாடகத்திலும், மேட்டூர் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும்உயரும் வாய்ப்புள்ளது.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]