For Daily Alerts
Just In
மக்கள் மீது சுமை: தமிழகத்தில் மின்சாரத்தின் மீது 5 சதவீதம் கூடுதல் வரி
சென்னை:
தமிழகத்தில் மின்சாரத்தின் மீது புதிதாக 5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
இதனால் ரூ. 500க்கு மின்சாரத்தை உபயோகித்தவர்கள் கூடுதலாக ரூ. 25 வரியாக செலுத்த வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மின்வாரியம் பிறப்பித்துள்ள கடந்த ஜூலை 7ம் தேதியே உத்தரவு பிறப்பித்துவிட்டது.ஆனால், உடனடியாக இது அமலாக்கப்படவில்லை.
இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி முதல் இந்த 5 சதவீத வரியை அமலுக்கு வருவதாக மின் வாரியம் கூறியுள்ளது.இதனால் அடுத்த மாதம் மின் கட்டணம் செலுத்தும்போதே 5 சதவீத வரியையும் செலுத்த வேண்டும்.
மின் கட்டண பில்லில் இந்த வரியும் சேர்த்தே கூட்டித் தரப்படும்.
Comments
Story first published: Thursday, July 10, 2003, 5:30 [IST]