For Daily Alerts
Just In
ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சிலை திருட்டு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஆழ்வார் கோவிலில் இருந்த ரூ. 10 லட்சம்மதிப்புள்ள பஞ்சலோக கிருஷ்ணர் சிலை திருடு போய் விட்டது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி, கருவறையில் இருந்த சிலையைக் காணாமல் திடுக்கிட்டார்.உடனடியாக போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது. கருவறையின் மேல் பகுகியில் துளை போட்டுஉள்ளே புகுந்து சிலையை திருடியது தெரியவந்துள்ளது.
5 கிலோ எடை கொண்ட இந்த சிலை ரூ. 10 லட்சம் மதிப்புள்ளது என கோவில் நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, September 6, 2003, 5:30 [IST]