For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலையாள திருக்குறள்: காளிமுத்து வெளியிட்டார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை சபாநாயகர் காளிமுத்து சென்னையில் வெளியிட்டார்.

உலகப் பொதுமறை திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்திலும்ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், தற்போது தான் முழுமையான அளவில் புத்தக வடிவில்வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மலையாள மொழியாக்கத்தை எம்.ஆர்.ஆர். வாரியர் என்பவர் செய்துள்ளார்.

மலையாள திருக்குறள் நூலின் வெளியீடு சென்னையில் நடந்தது. சபாநாயகர் காளிமுத்து புத்தகத்தை வெளியிடபிரபல மலையாள எழுத்தாளர் தேவன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் காளிமுத்து பேசுகையில், மாபெரும் புலவர் திருவள்ளுவரின் சாகாவரம் படைத்த திருக்குறளைதங்களது தாய் மொழியிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு மலையாளிகளுக்கு தற்போது கிடைத்துள்ளது.

தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல திருக்குறள். உலகப் பொதுமறையாக இது விளங்குகிறது. ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கே சொந்தமானது திருக்குறள் என்றார்.

கேரள அமைச்சர் எம்.எம்.ஹசன் பேசுகையில், ஜாதி, மொழி, மதம், இனங்களைக் கடந்தது திருக்குறள் என்றுபுகழாரம் சூட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X