தேர்தல் ஆணையர்களிடம் திமுக, காங்கிரஸ் புகார்
சென்னை:
ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை அரங்கேற்றவும் திட்டமிட்டிருப்பதால் பலத்தபாதுகாப்புடன் வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்ஆணையர்களை வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் கோபால்சாமி, டாண்டன் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். இன்று காலை தலைமைத்தேர்தல் அதிகாரி சாரங்கி, தமிழக தேர்தல் பார்வையாளர் பாசு, டிஜிபி கோவிந்த், மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர்.வாக்குப் பதிவின்போது, ஆளுங்கட்சியினர் வன்முறையைத் தூண்டவும், பெருமளவில் கள்ள ஓட்டுப் போடவும்திட்டம் தீட்டியிருப்பதால், வாக்குப் பதிவு தினத்தன்று பலத்த பாதுகாப்பு போட வேண்டும் என்று தேர்தல்ஆணையர்களிடம் கோரிக்கை விடுத்ததாக திமுக சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆற்காடு வீராசாமிதெரிவித்தார்.
எதிர்க்கட்சியினன் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களின்போது காவல் துறையினர் கடும் கெடுபிடிசெய்வதாகவும், இதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட பாரமலை கூறினார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications