மதுரை உயர் நீதிமன்ற கிளை: மே 17ம் தேதிக்குள் திறப்பு?
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையை மே 17ம் தேதிக்குள் திறப்பதற்கு உரியநடைமுறைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிகடிதம் எழுதியுள்ளார்.
மதுரை உலகநேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை ரூ. 50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் திறப்பு விழா தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.
ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி கட்டடம் திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஅறிவித்தார். ஆனால் சட்ட நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடிதிறப்பு விழா நடைபெறவில்லை.
இந் நிலையில் தற்போது சட்ட நடைமுறைச் சிக்கல்கள் முடிந்து விட்டதாகவும், எனவே வருகிற 17ம் தேதிக்குள்கிளை திறப்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிபதி சுபாஷன் ரெட்டி கடிதம்எழுதியுள்ளார்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை இயங்கத் தொடங்கியதும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்த சிவில், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மதுரைக்கு மாற்றப்படும். அதேபோல,மதுரை கிளைக்கு மாற்றலாகிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறைஊழியர்களும் மதுரைக்கு மாற்றப்படுவர்.












Click it and Unblock the Notifications