அத்வானிக்கு பயப்படும் வாஜ்பாயால் பயனில்லை: கருணாநிதி
சென்னை:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்பது நேரம் வரும்போது தெரியும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பிரதமராக்கலாம்என்பது எனது சொந்தக் கருத்து. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில் பிரதமர் தேர்வுசெய்யப்படுவார். அது உரிய நேரத்தில் தெரிய வரும்.
3வது அணிக்கான வாய்ப்பு குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம். அது உருவாகும்போது எங்களின்செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். பொது நலனின் அடிப்படையில் அப்போது முடிவெடுப்போம்.
தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டால், அப்போது செயல்பட வேண்டிய முறை, குறித்து மே 13ம்தேதிக்கு மேல் எஙகள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுப்போம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார் வாஜ்பாய்.
அதற்கு நாங்கள் பல காரணங்களைக் கூற முடியும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொடா சட்டத்தைஜெயலலிதா பிரயோகித்தபோது, பொடாவை வாபஸ் பெறுமாறு நாங்கள் பலமுறை கோனோம். ஆனால் வாஜ்பாய்அதை கண்டுகொள்ளவில்லை.
பொடா சட்டத்தைத் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் கூடவாஜ்பாய்க்கு இல்லை. அப்படியே அவர் நினைத்திருந்தாலும் அத்வானி குறுக்கிட்டுத் தடுத்திருப்பார்.அத்வானியை மீறி வாஜ்பாயால் ஒன்றும் செய்ய முடியாது.
இதுபோல பல காரணங்களுக்காகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினோம் என்றார் கருணாநிதி.