ஜெ. மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு
சென்னை:
ஜெயலலிதாவின் அகம்பாவம், ஆணவம் காரணமாகவே பாஜக-அதிஞிஞ்க கூட்டணிக்கு தமிழகத்தில் படுதோல்விகிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சரும், ஜெயலலிதாவால் புதுக்கோட்டை தொகுதி மறுக்கப்பட்டவருமானதிருதிாவுக்கரசர் கூறியுள்ளார்..
தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து கூறுகையில், வேறு வழியில்லாமல்தான்அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் போல, பாஜகவை தனதுகட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டினார்.
எனக்கு புதுக்கோட்டை கிடையாது, தமிழகத்தில் எங்கும் போட்டியிடக் கூடாது, பாஜக பிரசாரத்திற்குக் கூட நான்வரக் கூடாது, நான் கூட்டத்திற்கு வந்தால் அதிமுகவினர் வரக் கூடாது என்று அடுத்த கட்சியின் விவகாரங்களில்தலையிட்டு வெற்றி வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டது அதிமுக.
நான் கூட்டத்திற்கு வந்தால் நாங்கள் வர முடியாது என்று அதிமுக அமைச்சர்கள் எங்களது கட்சித் தலைமையைமிரட்டினார்கள். அம்மா திட்டுவார் என்று காரணம் கூறினார்கள்.
எல்லாம் நானே என்ற அகம்பாவ உணர்வுடன் அதிமுக தலைமை செயல்பட்டது. வெற்றி வாய்ப்புள்ளதொகுதிகளை பாஜகவுக்குக் கொடுக்காமல் வேண்டும் என்றே தோற்கக் கூடிய தொகுதிகளை ஒதுக்கியது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவராகவே முன்வந்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். அதை முறையாகபயன்படுத்தவில்லை. ரஜினி புகைப்படத்தைப் பயன்படுத்திய அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கினார்கள்.
இதுபோல நடந்தால் எப்படி ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஓட்டு கேட்பார்கள்?
இதேபோல, பிரசாரத்திற்கும் தன்னைத் தவிர வேறு யாரும் வரக் கூடாது என்பது போல அதிமுக தலைமை நடந்துகொண்டது. இத்தகைய போக்கு காரணமாகவே அதிமுகவும், அதனுடன் சேர்ந்ததால் பாஜகவும் தோல்வியைத்தழுவின என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications