புதிய அமைச்சர்களுடன் இன்று சென்னை திரும்புகிறார் கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார். அவருடன் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள 7 திமுக மத்திய அமைச்சர்களும் வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அமைக்க உதவும்வகையில் கருணாநிதியும் மனைவி தயாளு அம்மாள், பேரனும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன்ஆகியோரும் மே 16ம் தேதி டெல்லி சென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகிய திமுக தலைவர்களும் டெல்லிசென்றனர். பின்னர்
மன்மோகன்சிங் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இந்த அமைச்சரவையில்7 திமுக எம்.பிக்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை திரும்புகிறார் கருணாநிதி. அவருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 திமுகஅமைச்சர்களும் வருகின்றனர்.
அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
தொண்டர்களால் திக்குக்காடிய டெல்லி:
திமுக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 7 மத்திய அமைச்சர்களைப் பெற்றதை திமுகவினர் தலைநகர்டெல்லியில் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கருணாநிதி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.டெல்லியில் எந்த பிராந்தியக் கட்சியின் தொண்டர்களும் இந்த அளவுக்கு கூடியதில்லை என்று கூறும் அளவுக்குமிகப் பெரும் தொண்டர் கூட்டம் கருப்பு, சிவப்பு கரை வேட்டிகளுடன் ஹோட்டல் முன் காணப்பட்டது.
கருணாநிதியை வாழ்த்தி தொண்டர் கூட்டம் போட்ட கோஷத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
வழக்கமான பேன்ட் சட்டை இல்லாமல், தமிழக பாரம்பரியப்படி, வேட்டி, சட்டையில் தயாநிதி மாறன்பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். தாத்தா கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான் வேட்டி, சட்டைக்குமாறினாராம் தயாநிதி.












Click it and Unblock the Notifications