ரூ. 1 கோடி ஹெராயினை உடலில் கட்டிக் கொண்டு சென்ற 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உடல் முழுவதும் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு சென்ற 5பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோமையர்புரம் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது 5 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி சோதனை போட்டனர். அப்போது ஐந்து பேரும் தங்களது உடலில்ஹெராயின் போதைப் பொட்டலங்களை கட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அந்தப் போதைப் பொருட்களின் மதிப்பு ரூ. 1 கோடியாகும். இதைத் தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications