இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் ஆகும் மத வழிபாடுகள்
நியூயார்க்:
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் போதுமான பாதிரியார்கள் இல்லாததால் மதப் பணிகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி (அவுட்சோர்ஸ்) செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதன் விவரம்:
சிறப்பு வழிபாடுகள், குழந்தை பிறப்பு உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனைகள், மறைந்த உறவினர்களின் நினைவாக நடத்தப்படும் அஞ்சலிகள், உடல் நலம் தேற நடக்கும் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மத நிகழ்ச்சிகள் இந்தியாவில், இந்திய பாதிரிமார்களை கொண்டு நடத்தப்படுகின்றன.
குறிப்பாக கேரளத்தில் உள்ள சர்ச்களில் வெளிநாட்டினருக்கான வழிபாட்டு நிகழ்ச்சிகள் பெருமளவில் நடக்கின்றன. அந்த வழிபாடுகள் மலையாள மொழியில் நடத்தப்படுகின்றன.
ரோமன் கத்தோலிக்க தலைமை திருச்சபையான வாடிகன் மூலமாகவும், பிஷப்கள் மூலமாகவும், கிருஸ்தவ மத அமைப்புகள் மூலமாகவும் இந்தப் மதப் பணிகள் கேரள மாநில தேவாலயங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.
பெரும்பாலான பணிகள் இ-மெயில்கள் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.
நினைவஞ்சலி, நன்றி செலுத்தும் பிரார்த்தனைகளுக்கு கேரள தேவாலயங்களில் ரூ. 40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளுக்கு 5 டாலர்கள் (சுமார் 225 ரூபாய்) வசூலிக்கப்படுகிறது.
மாதத்துக்கு 350 வெளிநாட்டு மத பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடப்பதாக கொச்சின் திருச்சபையின் பிஷப் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிரியார்களுக்கு 45 டாலர்கள் வரை மாத ஊதியம் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டு வழிபாடுகளால் அவர்களின் ஊதியம் பெருமடங்கு அதிகரிப்பதாகவும் செபாஸ்டியன் கூறியுள்ளார்.
மேலும் பண விஷயத்தில் செழிப்பான சர்ச்கள், வளரும் நாடுகளில் உள்ள வசதி குறைந்த தேவாலயங்களுக்கு உதவுவதற்காகவே இந்த வழிபாட்டு அவுட்சோர்சிங்கை செய்கின்றன என்றார்.
வெளிநாடுகளில் இருந்து வழிபாடு நடத்த நிறைய கோரிக்கைகள் வருவதாக பெங்களூர் தர்மாராம் கல்லூரியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் நரிதூக்கி கூறியுள்ளார்.
இந்த மத வழிபாட்டு அவுட்சோர்சிங்கு பிரிட்டனில் எதிர்ப்பு கிளம்பிவிட்டது. பிரிட்டிஷ் தொழிலாளர் சங்கமான அமிக்கஸ், இந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளது.
ஆனால், இந்த வெளிநாட்டு மத வழிபாடுகள் காலங்காலமாக நடந்து வருவதாகவும் இது ஒன்றும் புதிதல்ல என்றும் கேரளாவின் முக்கிய பாதிரியார்களில் ஒருவரான வின்சென்ட் குண்டகுளம் தெரிவித்துள்ளார். இதை பணத்துக்காக யாரும் செய்வதில்லை என்றும், இதை சேவையாகவே செய்வதாகவும் கூறுகிறார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications