முகம்மது அலி விவகாரம்: உள்துறை செயலருக்கு கல்தா
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர்சிக்கியுள்ள நிலையில், காவல்துறையை நிர்வகிக்கும் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோதா திடீரெனமாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக நலத்துறைச் செயலாளரான ஷீலா ராணி சுங்கத், உள்துறைச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோரை சிபிஐ கைதுசெய்துள்ளது. இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து இருவரையும் தற்காலிகபணிநீக்கம் செய்து டிஜிபி கோவிந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந் நிலையில் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோதா திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வேறுபொறுப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.
ஷீலா ராணி சுங்கத் நிர்வகித்து வந்த சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் வருவாய்த்துறை செயலாளராக இருந்துவந்த சுந்தரத் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாகத்துறையின் ஆணையராக இருந்து வந்த சதபதி, வருவாய்த்துறை செயலாளராக்கப்பட்டுள்ளார்.
முகம்மது அலி விவகாரத்தில், சையத் முனீர் ஹோதாவை பலி கடா ஆக்கிவிட்டு தமிழக அரசு தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதாக ஒரு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், முகம்மத் அலியின் தவறுகள் தெரிந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பதிலேயேஹோதா ஆர்வம் காட்டியதாக இன்னொரு பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications