சென்னை அருகே தீவிபத்து; 20 வீடுகள் சாம்பல்
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வீடுகள் தீயில் கருகிசாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் சேதமடைந்தன.
கும்பகோணம் தீவிபத்தின் கோரம் இன்னும் மறையாத நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போதுபெரும் தீவிபத்துக்கள் நடந்து வருகின்றன. சென்னை செங்குன்றம் அருகே பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை என்பதால் 40க்கும்மேற்பட்ட மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந் நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில்20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில்சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் நேர்ந்ததாகத் தகவல் இல்லை.
ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சம்பவம் நடந்த இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.