பயஸ்-பூபதி தோல்வி: வெண்கல கனவு தகர்ந்தது
ஏதென்ஸ்:
ஏதென்சில் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடிதோல்வியடைந்தது.
இதனால் டென்னிசில் வெண்கலம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. குரோஷியாவின்மாரியோ அன்சிக் மற்றும் இவான் ஜும்பிக் ஜோடியிடம் 5-7, 6-4, 14-16 என்ற செட் கணக்கில்பயஸ்-பூபதி ஜோடி தோற்றது.
400 மீட்டர் ஓட்டம்: பினு தேர்வு
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கே.எம். பினு அரையிறுதிக்குத்தகுதி பெற்றார். அவர் இந்த தூரத்தை 45.48 நொடிகளில் கடந்தார். இதன் மூலம் அவர் புதிய தேசியசாதனையையும் படைத்துள்ளார்.
வட்டு எறிதலில் தோல்வி:
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹர்வந்த் கெளரும், சீமா அந்திலும்தோல்வியைத் தழுவினர்.
வில் வித்தையில் தோல்வி:
ஒலிம்பிக் காலிறுதிக்குத் தகுதி பெற இன்று நடந்த வில் வித்தைப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம்இந்திய ஆண்கள் அணி தோல்வியைத் தழுவியது.
ஹாக்கியில் தோல்வி:
இன்று நடந்த குரூப் பி ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய 2-1 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியாஇழந்தது.
நாடு திரும்பினார் வெற்றி வீரர்:
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற முன்னாள்ராணுவ மேஜர் ரத்தோர் (34) இன்று டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மிக உற்சாகமானவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி விஜ்ஜை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரத்தோர்.












Click it and Unblock the Notifications