முத்திரை தாள் மோசடி: பெண் ரகசிய வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி போலீஸ் கமிஷ்னர் சங்கரின் ஜாமீன் மனு2வது முறையாக சென்னை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரின்ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந் நிலையில் அவர்இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள நிஜாமுதீனின்உதவியாளர் சாய்ரா பானுவை வழக்கிலிருந்து விடுவிக்க சங்கர் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம்இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் டேனியேல் வாதாடினார்.

இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கரின் ஜாமீன் மனுவை நீதிபதி அருள்ராஜ் நிராகரித்தார்.

பெண் ரகசிய வாக்குமுலம்:

இந் நிலையில், எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ராமநாதன் முன்னிலையில் ஒரு பெண்உள்பட 2 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையே மேலும் பல போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களை இந்த இருவரும்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்கச் செய்துள்ளனர்.சுமார் 2 மணி நேரம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பர்தா அணிந்து வந்த அந்தப் பெண் போலி முத்திரைத் தாள் மோடி மன்னன் தெல்கியின் தமிழகக் கூட்டாளியானநிஜாமுதீனின் மனைவியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களது விவரங்களைத் தர சிபிஐஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+