For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபாச புகார்: நியூ படத்தை நீதிபதிகள் பார்த்தனர்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

ஆபாசங்கள் அடங்கியுள்ளதாகக் கூறி நியூ படத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் ஒருகட்டமாக, அந்தப் படத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்தனர்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ள நியூ படத்தில் இரட்டை அர்த்தங்கள் நிறைந்த வசனங்கள், பெண்களைஇழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் நிறைந்திருப்பாகக் கூறி அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றுதிராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநிாயகம், அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.விசாரணையின் ஒரு கட்டமாக இந்தப் படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டல் நியூ படத்தை நீதிபதிகள் இருவரும் பார்த்தனர்.அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்கள், தணிக்கை வாரிய அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

நியூ படத்தில் கிரண், சூர்யா நடித்துள்ள புதிய பாடல் காட்சியை சேர்க்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையுலகினர் பேரணி:

இதற்கிடையே திருட்டி விசிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்த் திரையுலக சங்கங்களின் சார்பில்வரும் 16ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குநர்கள்,தயாரிப்பாளர்ளும் இதில் கலந்து கொள்கின்றனர். கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனுகொடுக்கவுள்ளனர். அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதோடு, தமிழகம் முழுவதும் திரையரங்குகள்மூடப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X