ஓ.பி தம்பி மீது புகார் சொன்ன வன அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

தேக்கு மரங்களை வெட்டி கேரளாவுக்குக் கடத்துவதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீது புகார் கூறிய வனச்சரகர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜா மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் தென் மாவட்டபோலீசாரையே கலக்கி வரும் ஒரு பெண்மணி விஷயத்திலும் இவரது பெயர் மறைமுகமாக அடிபடுகிறது.

இந் நிலையில் தேனி வனப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்துவதில் ஓ.பியின் தம்பி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்,இதைத் தட்டிக் கேட்டதால் தன் மீது துறைரீயில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் நிருபர்களை அழைத்துப் பேட்டியளித்தார்ரேஞ்சர் ராஜேந்திரன்.

தன் மீது வனத்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ராஜேந்திரன், மீண்டும் தேனி மாவட்ட வனரேஞ்சராகப் பதவியேற்க வந்தார். இதையடுத்து தேக்கு மரக் கடத்தல் விவகாரத்தில் ஓ.பியின் தம்பியை கைது செய்யும்நடவடிக்கைகளில் இறங்கினார்.

இந் நிலையில் அவர் மீது திடீரென தீண்டாமைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. தனக்குக் கீழ் பணிபுரிபவரை ஜாதியைச்சொல்லித் திட்டியதாக, அவரையே புகார் கொடுக்க வைத்துள்ளனர் போலீசார்.

இதையடுத்து கைதாவதில் இருந்து தப்ப ராஜேந்திரன் தலைமறைவானார். ஆனால், அவரது வீட்டை இரவு, பகல் என்றுபார்க்காமல் போலீசார் தட்டி மனைவியையும் தந்தையையும் தொல்லைப்படுத்தி வந்தனர்.

இந் நிலையில் கும்பகோணத்தில் தனிப்படை போலீசார் நேற்றிரவு ராஜேந்திரனைக் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+