திரிசூல் ஏவுகணை மீண்டும் சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
தரையில் இருந்து எதிரி நாட்டு விமானங்களைத் தாக்கும் திரிசூல் ஏவுகணை இன்று மீண்டும்சோதனையிடப்பட்டது.
ஒரிஸ்ஸா சண்டிபூரில் உள்ள பாலாசூர் விண்வெளித் தளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடமாடும்லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
எதிரி நாட்டு விமானத்தை அடையாளம் கண்ட 6 நொடிகளில் இந்த ஏவுகணை விண்ணில் பாயும் திறன்கொண்டது. விமானங்களின் வெப்பத்தை வைத்து அதைப் பின்தொடர்ந்து, 9 கி.மீ. தூரம் வரை விண்ணில் விரட்டிச்சென்று தாக்கும் ஏவுகணை திரிசூல்.
இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட ஒரு இலக்கை திரிசூல்சரியாகச் சென்று தாக்கியது. தொடர்ச்சியாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications