தமிழகம் முழுவதும் கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு விடிய விடிய மழைபெய்தது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மதுரை, தேனி, கரூர் மற்றும் காவிரிப் பாசனப் பகுதிமாவட்டங்கள் மற்றும் சென்னையில் கன மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் நேற்று பிற்பகலுக்கு மேல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இன்றுகாலை வரை பகுதிகளில் நீடித்தது.
தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் சென்னை நகரில், நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதனால் நகரின்பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்தன.












Click it and Unblock the Notifications