இராக்கில் 10 பிணைக் கைதிகள் விடுப்பு
பாக்தாத்:
இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பிணைக் கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.
இராக்கிய தீவிரவாதிகளிடம் சிக்கும் பிணைக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தலையை வெட்டிக்கொல்லப்படுவதே வழக்கம். இந்தியாவைச் சேர்ந்த 3 பேரையும், எகிப்து, கென்ய நாட்டினர் 4 பேரையும் தான்முதன்முதலில் தீவிரவாதிகள் உயிரோடு விடுவித்தனர்.
இந் நிலையில் இத்தாலியைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களான இரு பெண்களையும்,அவர்களுடன் கடத்திச் செல்லப்பட்ட இந்த அமைப்பில் பணியாற்றிய 2 இராக்கியர்களையும் தீவிரவாதிகள்விடுவித்துள்ளனர். இவர்கள் கடந்த 7ம் தேதி பாக்தாதில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.
அதே போல எகிப்து நாட்டின் ஒரஸ்காம் தொலைத் தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரையும் மேலும்ஒருவரையும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். இவர்கள் கடந்த வாரத்தில் கடத்தப்பட்டனர்.
இங்கிலாந்தில் பிளவு: பிளேர்
இதற்கிடையே இங்கிலாந்தின் பிரிஹ்டன் நகரில் தனது தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் பேசிய அந் நாட்டுப்பிரதமர் டோனி பிளேர்,
இராக் போரினால் இங்கிலாந்து மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இந்தப் போரை பெரும்பாலானஇங்கிலாந்து மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், இராக்கில் ஜனநாயகத்தைக்கொண்டு வர போரைத் தவிர வேறு வழியில்லை.
இதனால் இந்தப் போருக்காக நான் வருத்தம் தெரிவிக்கத் தயாராகஇல்லை என்றார்.
அவர் பேச ஆரம்பித்தவுடனேயே, மாநாட்டிற்கு வந்திருந்த பலரும் எழுந்து, உங்கள் கைகளில் இராக்கியமக்களின் ரத்தம் ஒட்டியிருக்கிறது என்று கோஷமிட்டனர்.
அவர்களுக்கு பதிலளித்த பிளேர், நீங்கள் உங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கலாம். ஜனநாயக நாட்டில்வசிக்கிறீர்கள், இதனால் ஒரு பிரதமருக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். இந்தச்சுதந்திரத்தை இராக்கிய மக்களுக்கும் கிடைக்கச் செய்யவே போர் தொடுத்தோம் என்றார்.
பிரிட்டிஷ் பிணைக் கைதி: அராபத் முயற்சி
இதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த கென்னத் பிக்லியைவிடுவிக்கும் முயற்சிகளில் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவருடன் கடத்தப்பட்ட இரு அமெரிக்கர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications