For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் 29,000 பி.இ சீட்கள் காலி !
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு 29,000 பி.இ, பி.டெக் இடங்கள்காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி,
தமிழகத்தில் உள்ள 200 சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் 29,000 பி.இ, பி.டெக் மாணவர் இடங்கள்காலியாக உள்ளன. இது கடந்த ஆண்டை விட இது 8,000 இடங்கள் கூடுதலாகும்.
மாணவர் சேர்க்கையின்போது காலியிடங்களின் எண்ணிக்கை 69,100 ஆக இருந்தது. இவற்றில் 28,000 இடங்கள்சிங்கிள் விண்டோ முறையில் நிரப்பப்பட்டன. 17,000 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டன.
இந்த ஆண்டு மொத்தம் 45,000 மாணவர்கள் தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்றார்.
Comments
Story first published: Wednesday, October 6, 2004, 5:30 [IST]