வீரப்பன்: டெல்லியில் 3 மாநில அதிகாரிகள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக டெல்லியில் 3 மாநில அதிகாரிகள் பங்கு கொண்டஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறைச் செயலர் அனில் பைஜல் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளமாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலர்கள், டிஜிபிக்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் உள்துறைச் செயலர் ஷீலா ராணி சுங்கத், டிஜிபி கோவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீரப்பனைப் பிடிக்க இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், அவனை பிடிக்கத் தேவையான உதவிகள்குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications