For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ட்ஸ் நோயாளியுடன் திருமணம்: பெண் புகார்

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

தன்னை ஏமாற்றி எய்ட்ஸ் நோயாளிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக 7 மாத கர்ப்பிணிப் பெண் போலீசாரிடம் புகார் தந்துள்ளார்.இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த ராமராஜுக்கும் (32), சித்ரா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம்நடந்தது. இப்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சித்ரா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் தந்துள்ளார்.அதில்,

எனது பெற்றோரிடம் இருந்து ரூ. 2 லட்சம் வரதட்சணை வாங்கித் தரும்படி என்னை கணவர் ராமராஜ், அவரது தாயார் பத்மாவதி மற்றும்உறவினர்கள் துன்புறுத்துகிறார்கள்.

எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவரை என்னை ஏமாற்றித் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். இந் நிலையில் வரதட்சணை கொடுமையும் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ராம்ராஜையும் அவரது உறவினர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X