காதல் கவிதைகளை சிபிஐயிடம் ஒப்படைத்த ஜெயலட்சுமி !!
மதுரை:
ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னைப் பற்றி போலீஸ் அதிகாரிகள் எழுதிய காதல் கவிதைகளையும் மேலும் பல ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஜெயலட்சுமிஒப்படைத்துள்ளார்.
கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட 27 மணி நேர விசாரணையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஜெயலட்சுமி பதிலளித்துள்ளார்.
விசாரணையை சிபிஐ ஏ.எஸ்.பி. சிவாஜி, டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்துகின்றனர். ஜெயலட்சுமியிடம் கேட்கப்படும்கேள்விகள் சென்னையிலும், மதுரையிலும் தயாரிக்கப்படுகின்றன. ஜெயலட்சுமி கூறும் பதில்களின் அடிப்படையில் துணைக்கேள்விகளையும் கேட்டு அதற்கான பதில்களையும் பெறுகின்றனர்.
நேற்றைய விசாரணையின் போது போலீஸ் அதிகாரிகள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப்,ஜெயலட்சுமியை வர்ணித்து பல காக்கிச் சட்டைகள் எழுதிய காதல், காம கவிதைகள் கவிதைகள் அடங்கிய டைரி, கடிதங்கள் உள்ளிட்ட 18ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்.
அவரது பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஜெயலட்சுமி திருப்தி:
விசாரணைக்குப் பின் சிபிஐ அலுவலக வாயிலில் நிருபர்களிடம் பேசிய ஜெயலட்சுமி,
சிபிஐ விசாரணை திருப்தியளிக்கிறது. விசாரணை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் சொல்ல வேண்டிய நிறையவிஷயங்கள் உள்ளன. எத்தனை நாட்கள் விசாரணை நீடிக்கும் என்று தெரியாது என்றார்.
சிபிஐ அதிகாரி பேட்டி:
விசாரணை குறித்து சிபிஐ டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஜெயலட்சுமியைத் தவிர்த்து வேறு யாரிடமும் நாங்கள் விசாரணைநடத்தவில்லை. நெய்வேலிக்கு சென்று விசாரணை நடத்தியதாக வந்த செய்திகள் தவறு. ஜெயலட்சுமியிடம் விசாரணை தொடரும் என்றார்.